மதுமிதாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Madhumitha Suicide Attempt Reason : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, மதுமிதா தற்கொலை முயற்சிக்கு முயன்றதால் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவரின் தற்கொலைக்கு என்ன காரணம்? அப்படி பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதையெல்லாம் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யவில்லை.
ஆனால் தற்போது இது குறித்த தகவல் வெளியே கசிய தொடங்கியுள்ளன. டாஸ்கின் விவாதத்தால் மது தன்னை தாக்கி கொண்டதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.
அதை வைத்து பார்க்கும் போது மது தலைவர் போட்டியில் ஏமாற்று வேலை செய்ததை நெட்டிசன்கள் கண்டு பிடித்து வீடியோ போட்டு விமர்சனம் செய்து வந்தனர். இதே வாக்குவாதம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நடந்திருக்கும்.
அப்போது மதுவிற்கு ஆதரவாக கஸ்தூரியும் சேரனும் மட்டும் பேசியுள்ளனர், மற்றவர்கள் மது செய்தது தவறு என்று தான் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதத்தால் தான் மதுமிதா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.
இதனால் தான் மது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளவர்களிடம் பேசும் போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச விருப்பமில்லை என கூறி விட்டார்.
இது ஒரு புறம் இருக்க காவிரி விவகாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வர ஷெரீனுக்கும் மதுவிற்கு வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கவின் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் தமிழகத்துக்கு ஒன்னுனா ஒப்போ நீ உயிரை கொடு போ என மதுவை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் மது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதை தான் கமல் நீங்கள் செய்த தியாகம் அகிம்சை முறையில் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறியதாகவும் கூறப்படுகிறது.