புதியதாக ட்விட்டர் கணக்கை தொடங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுமிதா.
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருப்பவர் மதுமிதா.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியேறினார்.
இதுவரை ட்விட்டரில் கணக்கு வைத்து கொள்ளாமல் இருந்த மதுமிதா தற்போது புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
புதிய கணக்கு தொடங்கிய கையோடு நல்லதை பேசுவோம், நல்லதை நினைப்போம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகின்றனர். ஒருவர் மட்டும் ட்விட்டர்ல நிம்மதியா? இது கலவர பூமி என நறுக்கென கமெண்ட் அடித்துள்ளார்.
நல்லதையே நினைப்போம்..
நல்லதையே பேசுவோம்…
❤❤ pic.twitter.com/eJvdJGGnkP— Actor Madhumitha (@ActorMadhumitha) December 19, 2019
????????????
— Actor Madhumitha (@ActorMadhumitha) December 19, 2019
Twitter ah open panna nimmathiye irukkathu.yen na ithu kalavara boomi????????????
— вιgιℓ νιиσ (@VinoTamizhanda) December 19, 2019