விறுவிறுப்பாக நடந்து வந்த மாவீரன் படத்திற்கு புதிய சிக்கல் உருவாக்கியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இப்படியான நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் தீயாக பரவி வரும் இந்த தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்துள்ளது. படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.