மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் மழை காரணமாக தற்போது சிறிய பிரேக் விடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி. வரும் திங்கட்கிழமை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அது மட்டுமல்லாமல் தற்போது வரை 40% படப்பிடிப்பு நடந்து முடிந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.