சம்பளப் பிரச்சினை காரணமாக திடீரென மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Maanadu Salary Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ் பாரதிராஜா என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
நடுவர்களின் நியாயமற்ற, ஒருதலைப்பட்ச முடிவு : நீதி கேட்கிறார் மேரிகோம்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிக சம்பளம் வாங்குபவர்களை 30 சதவீத சம்பளத்தை பிடித்துக் கொண்டு உள்ளார். சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். இதனை ஏற்காத வெங்கட் பிரபு மற்றும் பலர் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். முழு சம்பளத்தை கொடுத்தால்தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறி விட்டதாக தகவல் வெளியானது. இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.! | Pa.Ranjith | Latest News HD
ஆனால் உண்மையில் வெளியான இந்த தகவல் முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது. அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த இயக்குனர் வெங்கட்பிரபு ஏற்கனவே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.