மாநாடு படத்தின் ரிலீஸில் சிம்புவுக்கு எதிராக திட்டமிட்டு சதி நடப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Maanadu Issue Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் நாளை மாநாடு என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மாநாடு படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மட்டும்தான் திரையரங்குகளில் அனுமதி என்று தமிழக அரசின் புதிய சட்டத்தை அறிவித்தது. இதனால் மாநாடு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு ஏன் இந்த சட்டத்தை போடவில்லை என கேள்வி எழுப்பினார். மாநாடு பட விழாவின்போது நடிகர் சிம்பு நிறைய பிரச்சனை கொடுக்கிறாங்க என கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த கண்ணீருக்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என திரையுலக வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் சங்கத் தேர்தலில் உதயநிதி விஷாலுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு சரத்குமாருக்கு ஆதரவளித்தார். இதனை காரணமாக வைத்து கொண்டு சிம்புவை பழிவாங்க இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech
அதுமட்டுமல்லாமல் மாநாடு படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் எப்படி வசூலை பெற்று விடும் என்பதால் அதனை குறைக்கவே இந்த சட்டம் என சொல்லப்படுகிறது. ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இதுபற்றி பேசி வருகின்றனர்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது சம்பந்தப்பட்ட படக்குழுவிற்கு தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனை உதயநிதி ஸ்டாலின்தான் வெளியிடுகிறார். இதே சட்டம் அப்போதும் இருக்கிறதா இல்லையா என பார்க்கிறோம் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.