மாநாடு திரைப்படம் மீண்டும் உருவாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. இவர் தற்போது சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.
மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்து கைவிடப்பட்ட மாநாடு திரைப்படம் மீண்டும் உருவாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆம் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி சிம்புவை சந்தித்துள்ளார், அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.