M. K. Stalin Speech :
M. K. Stalin Speech : நெல்லை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலும் முடங்கி உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
மேலும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுக்காமல் முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருவது வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5720 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு.!!
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘அதிமுக தலைமையிலான தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இவ்வாறு காலம் தாழ்த்தி வருவதால், கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கி காணப்படுகின்றன ‘ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பங்காரு அடிகளார் இல்ல திருமணத்தில் ஸ்டாலின் – ரகசியமாக சென்றது ஏன்?
இறுதியாக, விரைவில் ஆட்சி மாற்றம் வரப் போகிறது.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என்று கூறிய ஸ்டாலின், தோல்வி பயத்தால் தான் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை..! ” என விமர்சனம் செய்துள்ளார்.