Lyricist Vivekh Emotional Tweet

ஒரே நாளில் இரண்டு நண்பர்களை கொரோனா வைரஸ் தொற்று காவு வாங்கி விட்டதாக பாடலாசிரியர் விவேக் கண்ணீர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Lyricist Vivekh Emotional Tweet : சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாம் அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தமிழகத்தில் இந்த வைரசால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி வருகிறது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மரணம் அடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரே நாளில் தன்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்களை கொரோனா வைரஸ்க்கு பலி கொடுத்து விட்டதாக கண்ணீர்மல்க பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு நெருங்கிய நண்பர்களை பறிகொடுத்த விவேக்கிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் மக்கள் பலரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் முக கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது என இதை ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.