Losliya 1st Post After Father Death

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya 1st Post After Father Death : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையை ஈழத்து தமிழச்சியான இவர் தன்னுடைய கொஞ்சலான தமிழால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாயகியாக கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படியான நிலையில் தான் கடந்த மாதம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக தான் வேலை செய்த நாட்டிலேயே உயிரிழந்தார்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அவருடைய உடல் இலங்கை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தை இறந்த சோகத்தில் லாஸ்லியாவும் சமூக வலைதள பக்கம் வராமல் இருந்தார்.

இந்த நிலை தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைதளப் பக்கத்தில் சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.