தமிழகத்திலும் ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Lockdown Extension in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவத் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்திலும் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பொது ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை தொடரும். கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது தமிழகத்திலும் பொது முடக்கம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டு தலங்கள், மத கூட்டங்கள் நடைபெற தடை விதிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.