தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
Lockdown 5.O Update : கடந்த வருடத்தில் டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய குரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு வெளியாகியுள்ளன.
வாழ்க்கையில் இதைவிட வேறென்ன வேண்டும்??, இது போதும் – சுஜா வருணி வெளியிட்ட வீடியோ!
தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.
அதிலும் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உச்சம் அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் மட்டும் இதன் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் ஊரடங்கு எடுக்கப்பட வேண்டியது என்பது அவசியமாகிறது. எனவே இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர்கள் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித தவறுகளையும் அளிக்கக்கடாது. மேலும் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்தால் மட்டுமே இதன் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
இவர் செய்ய.. அவன் பார்க்க, ஒரே ஜாலி தான் – பார்ட்னருடன் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட அஞ்சலி!
அதிலும் குறிப்பாக சென்னையில் எவ்வித தளர்வும் அளிக்கவே கூடாது என அக்கழு பரிந்துரை செய்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மேலும் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.