Lock Down Parithabangal
Lock Down Parithabangal

உலகமக்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை தவறாக புரிந்து கொண்டதால் பல மில்லியன் பெண்கள் கர்ப்பம் ஆகி உள்ளனர்.

Lock Down Parithabangal : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் பெரும் உயிர் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளில் இருந்தால் தான் முடியும் என்பதால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

லாக் டவுன் ஆல் வந்த விபரீதம்.. காமெடி நடிகைக்கு மளமளவென வளர்ந்த தாடி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இதனால் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து அவர்களின் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை ஆங்கிலத்தில் ஒர்க் ஃப்ரம் ஹோம் என கூறுவோம்.

ஆனால் நம்மாட்கள் இதனை தவறாக புரிந்து கொண்டதால் உலக அளவில் ஊரடங்கு உத்தரவு கால இடைவெளியில் சுமார் 7 மில்லியன் பெண்கள் கர்ப்பமாகி உள்ளதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களிலும் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவைகள் இதுவரை இல்லாத அளவு கிட்டத்தட்ட 90% அதிக அதிகமாக விற்பனையாகி இருப்பதாக கடை உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

அப்படி இருந்தும் உலக அளவில் 7 மில்லியன் பேர் கருத்தரித்து இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க நீட்டிக்க உலக மக்கள் தொகையும் கிடுகிடுவென உயரும் போலிருக்கே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதிலும் திருமணமாகாத நெட்டிசன்கள் சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மாவே விடாது டா என புலம்பி தள்ளி வருகின்றனர்.