கொரானா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. இதன் தொடக்க விழாவில் கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Lingusamy Helps to Corona Patients : தமிழ் சினிமாவை ஆனந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இந்த படத்தினை தொடர்ந்து ரன், பையா, சண்டக்கோழி என பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.
இவர் தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இந்த ஆசிரமத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
ஆசிரமத்தை திறந்து வைத்த இவர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலமாக நன்றியை கூறியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.