மீண்டும் செங்கேனி போல நடிக்கவே மாட்டேன் என ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோமோல் தெரிவித்துள்ளார்.

Lijomol Interview About JaiBhim : தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ஆதரவு, சர்ச்சை என இரண்டையும் சந்தித்து வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் லிஜோமோல்.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகும் ஜிவி பிரகாஷுக்கு அக்காவாகவும் நடித்தார்.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஜெய் பீம் படம் பற்றி பேசியுள்ளார். எனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது ஜெய் பீம் திரைப்படம் என்னுடைய திருமண பரிசு என பலரும் பாராட்டுகிறார்கள். இந்த படத்திற்கு பிறகு இருளர் இன மக்கள் மீது அரசின் கவனம் திரும்பி இருப்பதாக சொல்லப் படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

படத்தைப் பார்த்த ஜோதிகா மட்டும் தனியாக என்னுடைய நடிப்பை குறிப்பிட்டு பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மூணாறில் சில காட்சிகளை படமாக்கியபோது நடிகர் சூர்யா என்னுடைய நடிப்பை பாராட்டி இது மட்டுமல்லாமல் இந்த ஊர் ஜிகிர்தண்டா சாப்பிட்டு இருக்கீங்களா எனக் கேட்டு அவருடைய சொந்தப் பணத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தார் என கூறியுள்ளார்.

சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny SPeech

மேலும் அந்த பேட்டியில் மீண்டும் செங்கேணி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக இல்லாமல் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து மாத காலத்திற்கு ஓய்வில் இருக்க போவதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.