Edappadi Palaniswamy Life History

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் அரசியலில் நுழைந்தது முதல்வரானது எப்படி என்பது பற்றியும் பார்க்கலாம்.

Life History of Edappadi Palaniswamy : தமிழகத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்று அம்மாவின் ஆட்சிக்கு இணையாக சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வெல்லக்கட்டி வியாபாரம் செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசியலில் நுழைந்து எப்படி என்பது குறித்து பார்ப்போம் வாங்க.

ஜாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கொண்டாடிய பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராகப் பதவியேற்ற வருடம் 1954.

இந்த வருடத்தில் மே 12ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள சில்லுவம் பாளையம் என்ற ஊரில் பிறந்தவர் தான் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆரம்பப்பள்ளியில் படிப்பதற்காகவே நான்கு கிலோமீட்டர் நடந்து தான் பள்ளிக்குச் சென்றார். எம்ஜிஆர் மீது கொண்ட தீராத பற்றால் தன்னுடைய 17 வயதில் அவரது ரசிகர் மன்றம் தொடங்கியதோடு அதிமுக தொண்டனாகவும் மாறினார்.

கட்சியின் மீது முழு அர்ப்பணிப்பு கொண்டு செயலாற்றியதால் தன்னுடைய 18 வயதிலேயே சிலுவம்பாளையம் கிளைக் கழக அதிமுக செயலாளராக பதவி ஏற்றார்.

21 வயதில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெல்ல மூட்டை வியாபாரம் செய்தார்.

1982-ல் எடப்பாடி ஒன்றிய கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1985-ல் சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவையைத் தொடங்கினார்.

1987-ல் இந்தியாவில் மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையை ஏற்றார்.

1989-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

1990-ல் சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

1981 மீண்டும் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 1983 ஆம் ஆண்டை போலவே 2001-லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொள்கை பரப்பு கழகத்தில் முக்கிய பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

இதே வருடத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் மாவட்ட செயலாளர் பொறுப்பும் கிடைத்தது. 1998 முதல் 2011 வரை பல்வேறு தடைகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் 2011 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்தத் தொகுதியான எடப்பாடியில் வெற்றி கண்டார்.

அதுமட்டுமல்லாமல் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வெற்றி பெறவும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்தார். இதனால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை இன்னும் அதிகமானது.

இதனையடுத்து அவரை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆக்கினார். மீண்டும் 2016-ல் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

இதனையடுத்து ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் உள்ளவர்களின் மொத்த ஆதரவோடு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.