மிஷ்கினை தொடர்ந்து லியோ படப்பிடிப்பை இயக்குனர் கௌதம் மேனன் நிறைவு செய்து இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் தனது 67வது திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் தனது காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அண்மையில் பகிர்ந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் கலந்து கொண்டிருக்கும் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களும் அவருக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்திருப்பதாகவும் விரைவில் அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் புதிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.