லெஜெண்ட் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி, பங்கேற்று நடித்தனர்.
ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப் போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் Legend சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினார்களாம்.
இந்த படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களும் சில இணையத்தில் வெளியாக இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல நல்லா பண்றயா ரொமான்ஸ் என கலாய்த்து வருகின்றனர்.