தொழிலதிபரான லெஜெண்ட் சரவணா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார்.
Legend Saravana Contribution to FEFSI : இந்தியாவின் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர முடியாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாத் துறையையும் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி வந்த நிலையில் தற்போது லெஜன்ட் சரவணா அவர்களும் ரூபாய் 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.