நானே வருவேன் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி செல்வ ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் வில்லனாகவும் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் நாயகன் பிரபு (தனுஷ்) தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர திடீரென பழைய நினைவுகள் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட பிறகு நல்லவன் தனுஷுக்கும் கெட்டவன் தனுஷுக்கும் இடையே நடக்கும் கதைதான் இந்த படம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
நானே வருவேன் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி வருகிறது. இந்த கதை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.