அரண்மனை 3 படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
Latest Update About Aranmanai 3 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியான நிலையில் அது ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் அரண்மனை படத்தின் அடுத்த தொடர்ச்சியாக அரண்மனை 3 என்ற படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களில் ஹன்சிகா பேயாக நடித்து வந்த நிலையில் மூன்றாவது பாகத்தில் வேறு ஒருவர் பேயாக நடித்துள்ளார்.
ஆம், இந்த படத்தில் நடிகர் ஆர்யா தான் பேயாக நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. லாக் டவுன் முழுமையாக முடியுது திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் வெகு விரைவில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.