நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் கார்த்தியின் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் NGK உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்திருக்கும் இவர் தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆர்வம் காட்டி வரும் ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கலந்து வருவார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் ரசிகர்களால் தீயாக பரவி வருகிறது.