நடிகை மல்லிகா ஷெராவத் முன்னணி நடிகர்களை குறித்து பேட்டியில் கூறிய அதிர்ச்சி தகவல் பாலிவுட் திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான. இதனைத் தொடர்ந்து இவர் ஜாக்கி சான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு சீனில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இவ்வாறு எப்போதும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத் தற்போது தனக்கு முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு வழங்க மறுத்ததற்காக பகீர் காரணம் ஒன்றை கூறி உள்ளார். தற்போது இவர் நடித்து இருக்கும் பாலிவுட் திரைப்படமான ஆர்.கே/ஆர்.கே திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதால் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத் முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார். மேலும் முன்னணி நடிகர்கள் பொருத்தவரை நடிகைகள் என்றால் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்யவேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாது.

இவ்வளவு ஏன், நள்ளிரவு 3 மணிக்கு போன் செய்து வீட்டுக்கு வா என முன்னணி நடிகர்கள் அழைத்தால் செல்ல வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை அப்படத்தில் இருந்தே தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் செய்ய மறுத்ததால் தான் பெரிய ஹீரோக்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை என மல்லிகா ஷெராவத் கூறி உள்ளார். இவர் கூறிய இந்த பகீர் தகவல் பாலிவுட் திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது