பிரபல நடிகர் ஆன சித்தார்த் அவர்கள் தன்னை சாக்லேட் பாய் என்று கூப்பிடும்போது எனக்கு எரிச்சலா வருது என்று அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இப்படத்தில் ஜெனிலியா உடன் இணைந்து எதார்த்தமான நடிப்பினை கொடுத்திருப்பார். இப்படத்தின் மூலம் இளம் வயது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு திரிஷா ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் 180 என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.

ஆனால் இப்படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்ததை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, என்எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததை தவிர போதிய அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதன்பின் காவிய தலைவன் என்ற படத்தின் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ள இவர் தொடர்ந்து அருவம் மற்றும் ஜிவி பிரகாஷ் உடன் அண்மையில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் சித்தார்த் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகர் மற்றும் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் தன்னை சாக்லேட் பாய் என்று அழைத்தால் தனக்கு எரிச்சலாக வரும் என்று மனம் திறந்து கூறியுள்ளார். நான் 17 வருஷமாக கடினமாக நடித்து வருகிறேன். ஆனால் என்னை பார்க்கும் போது ரசிகர்கள் சாக்லேட் பாய் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றனர்.

அவர்கள் அப்படி கூப்பிடும் போது எனக்கு எரிச்சலாக வருகிறது. என்னை பொருத்தவரை சாக்லேட் பாய் என்பது தப்பான வார்த்தை தான். ஒரு நடிகரை பார்க்கும் பொழுது அவரிடம் இருக்கும் திறமையை குறிப்பிட வேண்டுமே தவிர சாக்லேட் பாய் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. தனக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இந்த பட்டத்தை உடைப்பதற்காக பல வருடங்களாக போராடி வருகிறேன் அதனை கூடிய விரைவில் உடை தெரிவேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.