எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எடுத்துக்கொண்ட இறுதி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Last Photo of SPB : இந்திய திரையுலகில் பின்னணிப் பாடகராக 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
ஆகஸ்ட் மாதத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் இன்று மதியம் ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரானா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்டு இருந்தாலும் நுரையீரல் தொற்றால் உயிர் பிழைக்க முடியாமல் பலியானார்.
இவர் சிகிச்சையில் இருந்தபோது தம்ப்ஸ் அப் காட்டி நான் மீண்டும் வருவேன் என்ற தன்னம்பிக்கையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.
அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் மீண்டும் ஷேர் செய்து எஸ்பிபி அவர்களின் தன்னம்பிக்கையை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.