reeta linka
டொயோட்டா கார் நிறுவனத்தில் அதிபர் ரீட்டா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lanson Toyota Reeta Sucide Shocking In Chennai – சென்னை கோயம்பேட்டியில் லேன்சன் டொயோட்டார் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பவர் ரீட்டா.

அவரி கணவர் லங்கா லிங்காவும் அதே நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் நுங்கம்பாக்கத்தில் கோத்தகிரி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கார் விற்பனை செய்வது தொடர்பாக நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்களை ரீட்டா கடுமையாக திட்டயதாக தெரிகிறது.

இதில் கோபமடைந்த அவரின் கணவர் ஊழியர்கள் முன்னிலையிலேயே ரீட்டாவை திட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் ரீட்டா காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு அவரின் கணவர் வீட்டிற்கு சென்ற போது ரீட்டா கதவை திறக்கவில்லை.

சிறிது நேரம் வெளியே காத்திருந்த அவர் அதன்பின் ஒரு ஹோட்டலில் சென்று தங்கிவிட்டார். இதற்கிடையில் ரீட்டா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அவரின் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.