தன்னுடைய நிகழ்ச்சி குறித்த விமர்சனத்திற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
Lakshmy Ramakrishnan Interview About His Show : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்.
இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் சிக்கல் என்னவென்றால் பீர்பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மனைவியாக்கிக் கொண்டார்.
இதனால் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ஒருவர் மனைவி விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் எப்படி செய்து கொள்ள முடியும்? வனிதா எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என பேசி இருந்தார்.
நான் விஜய் ரசிகன் தான்.. ஆனால் சூர்யா பற்றிய கேள்விக்கு தரமான பதில் கொடுத்த அஜய் ஞானமுத்து!
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த விமர்சனத்திற்கு வனிதா இது ஒன்னும் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி அல்ல என விமர்சித்து இருந்தார். மேலும் உங்களோட டிஆர்பி காக ஏழை மக்களை மாத்துங்க எனவும் கூறியிருந்தார்.
இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் ஒன்னும் ப்ளூ ஃபிலிம் காட்டுல. நியாயம் கேட்டு வந்த ஏழைகளுக்கு தான் நீதி வாங்கி தந்தேன்.
நீங்கள் சொல்வது ஏழை மக்களையும் என்னையும் கேவலப்படுத்துவது போல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு மல்டிபிள் ரெலேஷன்ஷிப், லிவ்விங் டு கெதர் வாழ்க்கை பற்றியெல்லாம் பேசினால் முற்போக்கு சிந்தனையாளரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீட்டரின் முதல் மனைவி பாதிக்கப்பட்டுள்ளார் அதனால்தான் நான் பேசினேன். கடைசியில் அந்த செலப்ரிட்டியை கார்னர் பண்ணிட்டாங்க. அதன் பிறகு நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்த விஷயத்தில் தலையிட்டதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது.
பிறகு அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு நான் இந்த விவாதத்தில் இருந்து விலகிக் கொண்டேன். என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டை லாக் செய்து வைத்திருந்தேன். தற்போது லாக்கை நீக்கி விட்டேன் எனவும் கூறியுள்ளார்.