Laila Re-entery in Cinema : ரசிகர்களின் கனவு கன்னியாக ஒருகாலத்தில் இருந்த நடிகை லைலா, திருமணம் ஆன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டதாம்.
‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தீனா, தில் ஆகிய படங்களில் பெரிய பிரபலமான லைலா, ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’, ‘உன்னைநினைத்து’ போன்ற படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்து சூர்யாவுக்கு நல்லஜோடியாக மாறி இருந்தார்.
அதன்பின் ‘பிதாமகன்’ படத்தில் இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. திருமணமான பிறகு குடும்பம் குழந்தை குட்டின்னு போன லைலா தற்பொழுது கோலிவுட் பக்கம் எட்டிப் பார்க்கிறார்.
இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் விஷால் நடிக்கும் ஆலிஸ் என்னும் ஹாரர் த்ரில்லர் படத்தில் பேயாக லைலா நடிக்கவிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு லைலாவை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.