Vijay Vs Producer Tweet :
தளபதி விஜய் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் எங்களுடைய படமும் தள்ளி போனது அவரால் தான் என பிரபல பெண் தயாரிப்பாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாகி இருந்த இந்த படத்துடன் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடிச்சவன் படமும் வெளியாக இருந்தது.
ஆனால் இறுதி கட்டத்தில் தியேட்டர் பிரச்சனைகளால் தள்ளி போனது. இதனையடுத்து திமிரு புடிச்சவன் படம் வரும் நவம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது.
இதே நாளில் மற்ற சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாக உள்ளன. திமிரு புடிச்சவன் பட ரிலீசால் நகுல் நடித்துள்ள செய் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது திமிரு புடிச்சவன் படம் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி அனைத்து பிரச்சனைக்கும் விஜய் தான் காரணம் என ட்வீட் செய்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் சர்கார் படத்தோடு வெளியாக இருந்த திமிரு புடிச்சவன் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டுமே 800 தியேட்டர்களை சர்கார் படம் ஆக்கிரமித்து கொண்டது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்றும் குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
Yes the date was missed by the distributors as there was no screens available,Sarkar occupied 800+ screens in TN, which was a shock ,so how do we get screens,as promised by the provider counsil there was no screen regulation,but they come in date regulation.still….we request
— Fatima Vijay Antony (@mrsvijayantony) November 10, 2018