உங்களால அஜித் கண்டிப்பா அசிங்க படுவார் என குஷ்பு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Kushboo Blast Ajith Fan : கரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதனால் திரையுலகமும் முடங்கிப் போய் விட்டது. இதனால் திரையுலக பிரபலங்கள் பெப்சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்புவும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து பெப்ஸி அமைப்பிற்காக ரூபாய் 5 லட்சம் கொடுப்பதாக அவர் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு அஜித் போட்டோவை டிபி ஆக வைத்த ரசிகர் ஒருவர் அப்போ தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டீங்க, கூத்தாடி கூத்தாடிகளுக்கு தான உதவி செய்வீர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் கடுப்பான குஷ்பூ உங்களைப்போன்ற ஆட்களால் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது நீங்கள் தான் என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிலால் அந்த நபர் தன்னுடைய டிவீட்டையும் டெலிட் செய்துள்ளார்.
மேலும் ரசிகர்கள் யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு எல்லாம் அஜித் எப்படி பொறுப்பாவார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Nee yaaru photo vechirkiye?? Adhaan sonne..ungla maadhri asinga puduchavanglanaaledhaan Ajithkku asingam.. you guys are a stain to Ajith's clean reputation.. https://t.co/nlGlTW61Bi
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 29, 2020