அண்ணாத்த ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த வேலை குறித்து நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
Kushbhu About Annathae Rajinikanth : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்
நயன்தாரா நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்க குஷ்பு மீனா சூரி சதீஷ் என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷூட்டிங்கை முடித்துவிட்டு நானும் மீனாவும் பேசி கொண்டிருந்தோம். அப்போது ரஜினிகாந்த் அவருடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டு கேரவனுக்குள் செல்லாமல் நேராக எங்களிடம் வந்து எங்களது அரட்டையில் கலந்து கொள்ளலாமா என அனுமதி கேட்டார்.
புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்
அன்றைக்கு இருந்த ரஜினி சார் இன்றளவும் மாறவில்லை அப்படியேதான் இருக்கிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.