Kumbakonam school fire Accident :
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பரிதாபமாக இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004-ம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி அன்று, கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமின்றி அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.
தீயில் கருகிய தளபதி 63 செட்? – வெளியான அதிர்ச்சி உண்மை தகவல்.!
அந்த தீ விபத்தில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறி அழுதனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் அந்த ரணம் ஏற்படுத்திய வடு மாறாமல் உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் மனதில் ஆராத வடுவாக இச்சம்பவம் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விழிகளில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் பெற்றோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பொதுமக்களும் பெற்றோரும், நினைவு வளாகத்தில் மலர்களைத் துாவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் பள்ளியின் முன்பு குழந்தைகளின் படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி பள்ளியின் முன்பு அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளின் நினைவிடங்களிலும் அவர்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அந்த கொடூர சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த குழந்தைகளை மனதில் எண்ணி அவர்களது பெற்றோரும், பொதுமக்களும் மெழுகுவர்த்தி ஏந்தி பள்ளியின் முன்பு அஞ்சலி செலுத்தினர்.