KumariMuthu : நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுப்பட்டுள்ள வசனம் திடீரென இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் குமரிமுத்து. இவருக்கு அடையாளமே இவருக்கு வித்தியாசமான சிரிப்பு தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
1940-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பிறந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டில் பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாகவே கருதப்பட்டது.
சூர்யாவின் NGK ரிலீசால் ஒதுங்கி கொண்ட விஜய் – வெளியான பரபரப்பு தகவல்.!
இந்நிலையில் தற்போது குமரி முத்து கல்லறையில் எழுப்பட்டுள்ள வசனம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
குமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு… ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் எழுப்பட்டுள்ளது.