தமிழக அரசின் குடிமராத்து இத்திட்டத்தால் ஏரி குளங்களில் நீர் நிறைந்து காணப்படும் வீடியோவை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
Kudimaramathu Scheme in Tamilnadu : தமிழக அரசு தமிழக மக்களின் நலனை பாதுகாக்க பல்வேறு நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொரானா பேரிடர் காலத்திலும் சிறப்பான திட்டங்களால் நல்லாட்சியை வழங்கி வருகிறது.
குடிமராத்து திட்டத்தின் மூலம் 85% நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மீதமுள்ள 15 சதவீத வேலைகள் இந்த வருட இறுதிக்குள் முடிக்கப்படும் என தமிழக முதல்வர் கூறியிருந்தார்.
ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டால் இதுவரை பெய்த மழை மழை நீரானது வீணாகாமல் ஏரி குளங்கள் நிரம்பி காட்சியளிக்கின்றன.
மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்!
இது குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தமிழக அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள், தூர் வாரும் பணிகளால், “ஆர்ப்பரித்து வரும் கடல் போல நீர் நிலைகள்” காட்சியளிப்பதை காணும் போது உள்ளம் மகிழ்கிறது.
மாண்புமிகு அம்மாவின் அரசு நீர் நீலைகளைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.