Krunal Pandya About Dhoni :
2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது வெளி உலகத்திற்கு தெரியவந்தார். அதன்பின் தனது அயராத முயற்சியால் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்தார். ஒன்றிரண்டு டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி அதிக அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இதனால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க விரும்புகிறார். மேலும் விராட் கோலி, தோனியிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘மும்பை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டதுதான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. அதில் இருந்து நான் எனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டேன்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய ‘ஏ’ அணி சுற்றுப் பயணம் மிகவும் உதவிக்கரமாக உள்ளது. நான் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சென்று விளையாடியுள்ளேன்.
சீனியர் அணிக்காக செல்லும்போது இது சாதகமாக இருக்கும். வெளிநாடு சென்றுள்ளதால் தற்போது விளையாடும்போது அன்னிய நாட்டு சூழ்நிலை போன்று தெரியாது.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து !
நான் உண்மையிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருடம் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இறுதியாக களம் இறங்கிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
விராட் கோலியிடம் இருந்து, அவர் எப்படி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கிரிக்கெட்டில் உலகின் மிகப்பெரிய பினிஷர் எம்எஸ் டோனி. என்னைப் பொறுத்த வரைக்கும் இந்திய கிரிக்கெட்டிலும், உலகக் கிரிக்கெட்டிலும் எம்எஸ் டோனியை விட சிறந்த பினிஷர் இல்லை.
போட்டியை சரியாக கணிக்கும் திறமை மற்றும் பொறுமை ஆகியற்றை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.