Kovil Prasadam

☆ பிரசாதம் என்பது இறைவனுக்கு  நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பலவகையான உணவுப் பொருட்கள், பூக்கள், துளசி போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும்.

☆ ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

☆ பொதுவாக சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.

☆ தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.

☆ ஒருவர் வாங்கிய தீர்த்த பிரசாதத்தை மற்றவரின் கைகளில் இடுவது தவறான செயலாகும்.

☆ அதே போல, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை வாங்கும் போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர். அது மிகுந்த பாவமாகும்.

☆ விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. ஏனென்றால், அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது.

☆ உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம்.

☆ நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான். அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.

☆ அவ்வாறு, செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.