Kolayuthir Kaalam Postponed Again : LadySuperstar Nayanthara, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kolayuthir Kaalam Postponed Again :

கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார்,வாங்கி உரிமை பெற்றுள்ளார்

இந்நிலையில் நடிகை நயந்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற பெயரில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரித்துள்ள படத்தை ஜீன்14 ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.

2018-ன் மாஸான திரைப்படம் எது? இப்போதே உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள்.!

தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது.

காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயந்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின்21 ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இதனால் இன்று வரவேண்டிய இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒருமுறை தள்ளி போய் உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.