18 வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் மெகா ஹிட் சீரியல் ஒன்றில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Kolangal 2 Serial : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியல்களின் இரண்டாம் பாகம் உருவாவது தற்போது டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே சன் டிவியில் சித்தி சீரியல் இரண்டாம் பாகம் உருவாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ராதிகா சரத்குமார் அரசியல் மற்றும் தேர்தல் காரணமாக சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகையை தேடி வருகின்றனர்.
இப்படியான நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு தேவயானி நடிப்பில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற கோலங்கள் சீரியல் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போதைய நிலையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் தேவயானி கோலங்கள் சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
18 வருடங்களுக்கு முன்பே இந்த சீரியல் சன் டிவியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.