தசரா திரைப்படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்கும் ட்விட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதன் பிறகு தனித்துவமான கதைகளில் நடித்து கவனத்தை இருத்த இவர் தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதில் தெலுங்கு திரைப்படமான தசரா திரைப்படம் மார்ச் 30ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தசரா படத்தின் காட்சியின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது எனக்கு மிகவும் பிடித்த காட்சி’ என்று குறிப்பிட்டு ரீட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.