சாத்தான் குளத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த இருவர் இறந்துபோன சம்பவம் குறித்து கவின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Kavin Voice on Sathankulam Murder : தமிழகத்தில் சாத்தான் குளம் என்ற பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தந்தை, மகன் என இருவரை விசாரணை செய்ய அழைத்து சென்ற போலீசார் அவர்களை அடித்தே கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகாரை படிக்கும் போது மனசு பதறுது. அந்த அம்மா எப்படி துடித்து இருப்பாங்க. அந்த இருவரும் சாகறதுக்கு முன்னாடி என்னென்ன எல்லாம் நினைச்சு இருப்பாங்க.
இதை எதுவுமே நினைக்காம இந்தக் கொடூரத்தை பண்ணிட்டு எப்படி அழ, அவங்களால நல்லா இருக்க முடியும் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.