காப்பான் பாணியில் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக இயக்குனர் ஒருவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Kathukutti Movie Director Shocking Tweet : தமிழ் சினிமாவில் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காப்பான். இப்படத்தில் சிறு புழுக்கள் இனம் ஒன்றுகூடி ஒட்டு மொத்த பயிர் வளத்தையும் அழிப்பதை காட்டி இருந்தனர்.
அதேபோல் தற்போது தமிழகத்திலும் நடைபெற தொடங்கியுள்ளதாக கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் என்பவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புழுக்கள் எப்படி இந்தியாவிற்குள் வந்தது என்பது குறித்து இதை எப்படி தடுப்பது என்பது குறித்து எவ்வித ஆய்வையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வைரஸ் மனிதனை அழிக்கிறது. இந்த புழுக்கள் பயிர்களை அழிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவிற்கு ரசிகர்களும் எங்கள் பகுதியில் இதுபோல் தாக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் என்ன மருந்து அடித்தாலும் இவைகளை விரட்ட முடியவில்லை எனவும் கூறி வருகின்றனர்.
காப்பான் படத்தில் காட்டப்பட்டதை போல அமெரிக்காவிலிருந்து வந்த படைப்புழுக்கள் சோளம் தொடங்கி நெற்பயிர் வரை திடீரென தாக்க தொடங்கின. இந்த புழுக்கள் இந்தியாவுக்கு எப்படி வந்தன என்கிற விசாரணையோ தடுப்பு மருந்து நடவடிக்கையோ இன்றுவரை எடுக்கப்படவில்லை. பயிருக்கு பூச்சி.. உயிருக்கு வைரஸ்! pic.twitter.com/DdQxQYX1AD
— இரா.சரவணன் (@erasaravanan) April 2, 2020
எங்க ஊர் பக்கம் எல்லாம் இதோட தாக்கம் ரொம்ப அதிகமா இருக்கு ஆனா என்னதான் மருந்து அடிச்சாலும் அழிய மாட்டேங்குது
— துணிவு / மணி (@ManiTwitss) April 2, 2020