5 வருடத்திற்கு பிறகு கத்தி திரைப்பட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மதுரை கிளை நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் கத்தி. விவசாய பிரச்சனைகள் பற்றி பேசிய இந்த படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இத்தனை வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆம், இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவதாக அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தி திரைப்படம் 2014-ல் வெளியானது என்பது 5 வருடத்திற்கு பிறகு இப்படியொரு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.