Kathir About Formers
Kathir About Formers

சிட்டியில் நாம் செய்யும் ஒர்க் அவுட் உண்மையான பெயர் இதுதான் என நடிகர் கதிர் கூறியுள்ளார்.

Kathir About Formers : தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கதிர். வளர்ந்து வரும் நடிகரான இவருக்கு மாரி செல்வராஜ் இயக்கிய விட பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது.

அதன்பிறகு தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் கதிரின் நடிப்புக்கு தீனி போட்டது.

போனி கபூர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி – அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்!

இன்னும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கதிர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கையில் மண்வெட்டியுடன் கிராமத்தில் விவசாயிகள் செய்யும் அன்றாட வேலைகள் தான் சிட்டியில் ஒர்க்கவுட் என நாம் செய்கிறோம்.

என்னத்த சொல்ல போங்க என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த தொகுப்பாளினி ரம்யா வெரி கூல் என பதிலளித்துள்ளார்.

அதேபோல் இன்னொரு கார்த்திகேயர் கையில் கிளவுசுடன் மண்வெட்டியை பிடித்து இருப்பதை பார்த்து கிளவுஸ் போட்ட விவசாயி இன்னைக்கு தான் பார்க்கிறேன் என கிண்டல் அடித்துள்ளார்.

நடிகர் கதிர் ஈரோட்டிலிருந்து புகைப்படத்தை வெளியிட்டு அதை பார்த்த ரசிகர்கள் ஈரோடு பாய் என கமெண்ட் அடித்துள்ளனர்.

கதிர் விவசாயிகள் குறித்து பதிவிட்ட பதிவு நெகட்டிவ் கருத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் ஒருவர் விவசாயினா கேவலமா போச்சா என்ன அர்த்தத்தில் சொல்றீங்க எனக்கு புரியல என கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் உழைப்பின் மதிப்பறிந்தவன் உழைப்பாளிகளில் முன்னோடி ஆவான்.
உழைப்பாளிகளின் மதிப்பறிந்தவன்
முதலாளிகளில் முன்னோடி ஆவான்.

உழவனின் ஏர் கலப்பை தான் உலகத்தின் உயர் கோபுரம் 🙏
பிறர் பசியை தீர்ப்பவன் இறைவனென்றால் விவசாயிகள் தான் விக்ரகங்கள் 🔥 என கூறியுள்ளார்.