கவின் பேசியதை குறித்து கஸ்தூரி செய்துள்ள ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
Kasthuri Tweet About Kavin : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 5 நாட்கள் முடிந்து விட்டது. நேற்று கவின் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின் போது தன்னுடைய வாழ்க்கையில் சோகங்களை பற்றி பேசி இருந்தார்.
அப்போது என்னுடைய குடும்பம் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட போது உறவினர்கள் யாரும் உதவவில்லை. தயவு செய்து எங்க வீட்டுக்கு வந்துடாதீங்க என்று தான் சொன்னார்கள், நண்பர்கள் மட்டும் தான் உதவி செய்தார்கள் என்று பேசி இருந்தார்.
இது குறித்து நடிகை கஸ்தூரி நீ என் இனமடா.. உறவினர்கள் உதவில்லை என்றாலும் பரவாயில்லை, துரோகம் செய்யாமல் விட்டார்களே நீ கொடுத்து வச்சவன் என கூறியுள்ளார்.
நீ என் இனமடா என கஸ்தூரி பதிவிட்ட டீவீட்டால் அவரும் உறவினர்களால் பாதிக்கப்பட்டுள்ளார் போல என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கஷ்டப்படும்போது சொந்தகாரங்க ஒண்ணும் செய்யல… எல்லாமே நண்பர்கள்தான்..- கவின் …
என் இனமடா நீ ராசா. உதவி செய்யலேன்னா கூட பரவாயில்ல, துரோகம் செய்யாம விட்டார்களே, நீ கொடுத்துவச்சவன் ! #BiggBossTamil3 pic.twitter.com/P4YZ9pMga4
— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2019