பொன்னியின் செல்வன் திரைப்படம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ள நிலையில் நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதாவது பணியின் செல்வம் படத்தின் ராஜராஜ சோழன் தமிழன் என்பது போல காட்டப்பட அப்போது தமிழினம் என ஒன்று இல்லை சைவம், வைணவம் இன்று மட்டுமே இருந்தது என சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதம் எழும்ப தொடங்கியது.
அரசியல்வாதிகள் சிலரும் இது பற்றி பேசி வருகின்றனர். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்து அறநிலைத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும் சைவம், வைணவம் என பெயரிட வேண்டும் என கூறியிருந்தது மேலும் பரபரப்பை கிளப்பு இருந்த நிலையில் நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் எவ்வளவு கேவலமான அரசியல். #tamilarenotHindus அப்போ தமிழன் யார் என்ற கேள்வி வருதில்லயா? ராஜராஜன் சைவன் என்று கூப்பாடு போடுபவர்கள் கூட தமிழன் சைவம் #TamilsAreShaivites என்று பதிவிடாமல் தமிழர் இந்து அல்ல என்று சொல்வதின் உள்நோக்கம் புரிகிறதா? மாற்று மதத்தினரின் தமிழ்த்தனத்தை தூக்கி பிடித்து இந்து நம்பிக்கைகளை மட்டும் மட்டம் தட்டி இந்துவாக தொடர்ந்தால் தமிழரே இல்லை , வேசி மகன் என்றெல்லாம் சொல்லி எப்படியாவது மக்களை பிரித்து ஆள துடிக்கும் சிறுபான்மை வியாபாரிகள் கனவு பலிக்காது. Tamil History is Hinduism’s history என குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதள பக்கங்களில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.