Karunaaas Speech : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil Cinema News , Karunaaas

Karunaaas Speech :

ராமநாதபுரம்: யாருடனும் சமரசம் செய்து ஊழலுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை என்று கருணாஸ் அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். மேலும், பாதுகாப்பு இல்லாததால் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ், நேற்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து தொகுதி பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ் பேசுகையில், ஒன்றரை வருடங்களாக தொகுதி பக்கம் வர முடியவில்லை. நான் சமூக அமைப்பை சார்ந்துள்ளதால் போதிய பாதுகாப்பில்லாத நிலையில் வர முடியவில்லை என தெரிவித்தார்.

திருவாடானை தொகுதியில் 22 கண்மாய்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குடிமராமத்து பணியில் அரசியல் தலையீடு உள்ளதாக புகார் வந்துள்ளது.

எனது தொகுதியில் குடிமராமத்து பணியில் புகார் வந்ததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற நான் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அதிமுகவினர் ஒத்துழைக்கவில்லை.

சொன்னபடி தீபாவளிக்கு வெளியாகுமா பிகில்? அச்சத்திலும் பதற்றத்திலும் அட்லீ.!

என்னால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என அமைதியாக இருந்தேன். மேலும் கடந்த காலங்களில் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அதிகாரிகள் யாரும் ஒத்துழைக்கவில்லை.

தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் மணல் கடத்தல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன.

நான் யாருடனும் சமரசம் செய்து ஊழலுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை என்று கூறி அதிர்ச்சியளிக்கும் விதமாக பேட்டியளித்துள்ளார். மேலும், பாதுகாப்பு இல்லாததால் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.