நடிகர் கார்த்திக் கிளீன் ஷேவ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவோடு சேர்த்து பகைந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை போன்று வரிசையாக பல படங்களை தற்போது வரை நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பிற்கு என்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் இவர் நடிப்பில் தற்போது ‘பொன்னியன் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ போன்ற இரண்டு படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இவ்விரண்டு படங்களிலும் முரட்டுத்தனமாக தாடியுடன் நடித்திருக்கும் கார்த்தி தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிளீன் ஷேவ் செய்திருக்கும் நியூ லுக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவோடு பகிர்ந்திருக்கிறார்.

அதில்,’ ஒரு பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளிய வர கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா அதை நீங்கள் செய்வதால் அவ்வளவு மோசமாகவும் இருக்காது’ என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது அப்பதிவோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.