கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் “சர்தார்” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் நாகர்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து பதிவு ஒன்றை கார்த்திக் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கைதி படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “சர்தார்”.  பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில்இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியாக இருக்கும்  இப்படத்தின்  வெளியீட்டு உரிமையை இரண்டு பிரபல நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்  பெற்றுள்ளது. அதேபோல் தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திரா வெளியீட்டு உரிமையை நடிகர் நாகர்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

இப்படத்தை நாகார்ஜுனா பெற்றதை குறித்து கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கார்த்தி “நாகர்ஜுனா காருவுடன் நான் இருக்கும் போது எப்போதும் நல்ல விதமாக உணர்வேன். தற்போது அவர் என் படத்தின் பின்னால் இருப்பதனால் என்னை மிக உறுதியானவனாக உணர்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.