செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக கார்த்திக்ராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Karthik Post After Releave From Sembaruthi : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகனாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வருகிறார்.
டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த இந்த சீரியலில் இருந்து நடிகர் கார்த்தி கடந்த டிசம்பர் மாதம் திடீரென விலகிக் கொண்டார். இதுகுறித்து தொலைக்காட்சி நிர்வாகமும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கார்த்தி இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருடனான உறவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் கூறியிருந்தது.
அதன் பின்னர் ஆதியின் கதாபாத்திரத்தில் தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். ஆனால் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மீண்டும் சீரியலுக்குள் கார்த்தியைக் கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிங் என எழுதப்பட்டிருக்கும் டி-ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரே சூரியன் ஒரே நிலவு ஒரே உண்மை என பதிவிட்டுள்ளார். அதாவது ஒரே ஒரு கிங் தான் அது நான் மட்டும் தான் என சொல்வது போல இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.