Karthik Dial Seitha En Short Film
Karthik Dial Seitha En Short Film

கௌதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Karthik Dial Seitha En Short Film : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன்.

இவரது இயக்கத்தில் சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் ஜெசி ஜெசி என ஒலிக்க வைத்தார். சிம்புவின் நடிப்பு பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.

சூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார் அவர்கள் தெரியுமா? ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை களத்தை அடிப்படையாக கொண்டது போல குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் இக்குறும்படம் உருவாகியுள்ளது. சிம்புவும் த்ரிஷாவும் மட்டுமே இதில் நடித்துள்ளனர்.

குறும்படத்தின் டீசரில் திரிஷாவை மட்டுமே காட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி இருந்தார் கௌதம் மேனன்.

என் தலைவன் சிம்பு இருக்கானா இல்லையா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது குறும் படம் வெளியாகி சிம்பு இருப்பதை உறுதி செய்துள்ளது. சிம்புதான் மெயினாக இருக்கிறார் என்பது தான் பெரிய ஹைலைட்.

லாக் டவுனால் வீட்டில் இருக்கும் கார்த்தி தன்னுடைய அடுத்த படங்களுக்கு கதை எழுத முயற்சிக்கிறார்.

ஆனால் அவரது மனதில் எதுவுமே தோன்றவில்லை அவர் எழுதிய டயலாக்கை அடுத்த நாள் பார்த்தால் அவ்வளவு கேவலமாக இருக்கிறது.

இதனால் அவர் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு டயல் செய்கிறார். மறுபக்கத்தில் ஜெஸ்ஸி ஆக திரிஷா போனை எடுக்கிறார்.

திரிஷாவின் குரலைக் கேட்டதும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பார்த்த அதே கார்த்திக்கின் ரியாக்சன் மீண்டும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இவர்களுக்கு இடையேயான உரையாடல் தொடங்குகிறது. நியூயார்க்கில் இருந்து லாக் டவுனுக்கு இரு தினங்களுக்கு முன்பு தான் வந்தேன்.

அங்க இத பத்தி சரியா புரிஞ்சுக்கல பயம் இல்லை. கேரளாவில் அதிகமாக கொரானா கேஸ் இல்ல.. சேஃபா இருக்கோம் என்கிறார்.

விஜய்யை இயக்க தயாராகும் கௌதம் மேனன்? உண்மை என்ன? – இணையத்தில் வைரலாகும் பரபரப்பு தகவல்

கார்த்திக் தன்னுடைய ஃபீலிங்ஸை வெளிப்படுத்துகிறார். உன்னால முடியும் கார்த்திக். நெட்பிளிக்ஸ், அமேசான் நிறைய இருக்கு. இப்ப அவங்க எல்லாம் உன்னை தேடி வருவாங்க.

அதேபோல் த்ரிஷா உனக்கு என்ன வேணும் இப்போ என கேட்க ஐ நீட் யூ, ஐ நீட் யூ என கூறுகிறார்.

ஒரு முறை ஐ லவ் யூ என கூறும்படி கார்த்தி கேட்க திரிஷாவும் கூறுகிறார்.

ஆனால் நீ எனக்கு ஏற்கனவே இருக்கும் இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவது குழந்தை மாதிரி எனக் கூறுகிறார்.

ஜெஸ்சி தன் வார்த்தைகளால் கார்த்தியின் மனநிலையை தேற்றுகிறார்.

நீ எனக்கு மூன்றாவது குழந்தை என ஜெசி கூறியதும் கார்த்தி மௌனராகமா என கேட்கிறார். மணி சார் எனக்கு ஆப்பு வச்சிட்டீங்க என்ன கூறுகிறார் கார்த்தி.

இறுதியில் ஒரு வழியாக புதிய உற்சாகத்துடன் தன்னுடைய பட வேலைகளை கவனிக்க தொடங்குகிறார்.

குறும்படம் பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக உருவாக்கியுள்ளார் கௌதம் மேனன்.

இதோ அந்த குறும்படம்